Skip to main content

சண்டையை தடுக்க போனவரை தாக்கிய போராட்டகாரர்கள்... காதை கடித்து குதறிய இளைஞர்!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019


ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டைகோமிங் என்ற பகுதியில் போராட்டக்காரர்கள் மனித சங்கிலி அமைத்து அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் கூட்டத்துக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்தவர்களிம் பேச முற்பட்டுள்ளார். ஆனால் அவரையும் சரமாரியாக போராட்டகாரர்கள் தாக்கியுள்ளார்.
 

h



இதனால் கோபமான அவர், அந்நாட்டின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரின் காதைக் கடித்து அவர் துப்பியுள்ளார். இதனால், அந்த நபரை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த காது கடிக்கும் நபரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்கு சென்றவரை மிதித்துக் கொன்ற யானை...

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

The elephant that trampled to death while going to the temple ...

 

கோவையை அடுத்த சிறுவாணி சாலை போளுவாம்பட்டி நரசிபுரம் பிரிவு பகுதியில் யானை மிதித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். போளுவாம்பட்டி நரசிபுரம் பிரிவு பகுதியில் பூண்டி மத்தி பீட்டுக்கு உட்பட்ட நரசிபுரத்தில் இருந்து தாமனம்புதூர் செல்லும் வழியில், சாலை ஓரத்தில் உள்ள ஓடை அருகில் சுமார் 40 வயதுடைய அடையாளம் தெரியாத நபர் காட்டு யானை தாக்கி இறந்ததாக, நேற்று (29.01.2021) காலை 7.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள விஸ்வாமித்திரர் கோவில் பூசாரி  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதையடுத்து வனத்துறை அலுவலர் ஆசிஃப் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். முதல் கட்ட விசாரணையில் போளுவாம்பட்டி காப்புக்காட்டு பகுதியில் பிணம் கிடந்தது தெரியவந்தது. மேலும் இறந்த நபர் இந்தச் சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்தவர் அல்ல என்பதும் தெரியவந்தது

 

இந்த நபர் அடிக்கடி சம்பவ இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விஸ்வாமித்திரர் கோவில் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வார் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, அந்தக் கோவில் பூசாரி கணேஷ் என்பவரிடம் வனதுறையினர் விசாரணை செய்ததில், இறந்த நபர் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (45) என்பதும் இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

 

மேலும் இந்த நபர் கோயிலுக்கு அடிக்கடி வருபவர் என்றும், முழுவதும் சாராயம் குடித்து விட்டு இங்கு வந்து சுற்றிக்கொண்டிருப்பார் என்றும் பூசாரி தெரிவித்துள்ளார். நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் புதூர் கிராமத்தில் ஒரு ஒற்றை காட்டு யானை சுற்றிக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, இரவு ரோந்து பணி குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தக் காட்டு யானையை வேட்டைக்காரன் கோவில் வனப்பகுதிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

 

அதற்கு முன்னதாக கார்த்திக், யானை தாக்கி இறந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வனவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இறந்துபோன கார்த்திக் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுசென்றனர்.

 

Next Story

அமைச்சர்களைக் குறிவைத்து தாக்குதல் - 30 பேர் பலி!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

yemen

 

 

ஏமன் நாட்டில் புதிதாக உருவாகியுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், அண்டை நாடான சவுதி அரேபியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு திரும்பியதும், அவர்களைக் குறி வைத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.

 

சவுதி அரேபியாவிலிருந்து ஏமன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் வந்த விமானம் தரையிறங்கியதும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் பலியானோதோடு, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 

இந்த தாக்குதலில் அமைச்சர்கள் யாரும் பாதிப்படையவில்லை என்று அறிவித்துள்ள ஏமன் அரசு, ஹவுத்தி மிலிட்டா என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இந்த அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.