ADVERTISEMENT

மெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...

03:22 PM Nov 23, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தன்னுடன் இருந்த உறவு குறித்து வெளியில் யாருக்கும் கூறாமல் இருப்பதற்கு துபாய் இளவரசி தனது மெய்க்காப்பாளருக்கு சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் ஆல் மக்தூமின் ஆறாவது மனைவியான இளவரசி ஹயா, தனது கணவரிடம் இருந்து பிரிந்து லண்டனில் தஞ்சமடைந்த பிறகு தனது இரண்டு குழந்தைகளையும் தனது மனைவி வளர்க்கக்கூடாது என பிரிட்டன் உயர்நீதிமன்றம் ஒன்றில் துபாய் மன்னர் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குழந்தைகளை இளவரசி ஹயாவே வளர்க்கலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது, இளவரசி ஹயாவுக்கும் பிரிட்டனில் அவருடைய மெய்க்காப்பாளராக இருந்த ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ் என்பவருக்கும் தொடர்பு இருந்தது குறித்த செய்திகள் வெளிவந்தன. 37 வயதான ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ், இளவரசி ஹயா இருவருக்குமான உறவு குறித்த தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னுடன் இருந்த உறவு குறித்து வெளியில் யாருக்கும் கூறாமல் இருப்பதற்கு ஹயா தனது மெய்க்காப்பாளருக்கு சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதில் பணம் தவிர்த்து விலையுயர்ந்த கடிகாரங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றையும் இளவரசி ஹயா வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT