பிரிட்டன் அரசியலில் அதிரடி மாற்றம்... இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பிரதமர் ஆக வாய்ப்பு!

Boris Johnson

பிரிட்டன் பிரதமர்போரிஸ்ஜான்சன்தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யஇருப்பதாகதகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனில்போரிஸ்ஜான்சன்தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அந்தஅரசில் இருந்துஅமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வந்த நிலையில் பிரதமர்போரிஸ்ஜான்சனும்தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டனின் புதியபிரதமரைகட்சி தேர்ந்தெடுக்கும் என்றும் அதுவரை இடைக்காலபிரதமராகதான் செயல்படுவேன் என்றும்,.அடுத்த வாரத்தில் புதியபிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கும் எனவும்ஜான்சன்அறிவித்துள்ளார்.

Boris Johnson

போரிஸ்ஜான்சன்தலைமையிலான அமைச்சரவையில் முதன்முறையாக நிதித்துறை அமைச்சர் ரிஷிசுனாக்பதவி விலக, தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சரும் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் கடந்த இரண்டு நாட்களில் மொத்த அமைச்சரவையும் காலியான நிலையில், தன் தலைமையின் மீது நம்பிக்கை இல்லை என உணர்ந்தஜான்சன்தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷிசுனாக்இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்தபிரதமராகதேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், அப்படி நிகழ்ந்தால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு வலுப்படும்எனக்கருதப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் இந்தியவம்சாவளியைசேர்ந்த கமலாஹாரிஸ்துணை அதிபராகஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

britain India
இதையும் படியுங்கள்
Subscribe