சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. உலக அளவில் 1,98,214 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியட இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வு அமெரிக்காவில் தொடங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக கரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதா என்று பலரும் அந்த பதிவிற்கு கீழே கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அந்த ட்விட்டர் பதிவில் கரோனா வைரஸை சீன வைரஸ் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
Show comments