Skip to main content

சீன அதிபரிடம் லடாக் எல்லை பிரச்சனையை பேசினாரா பிரதமர் மோடி?

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

Did Prime Minister Modi discuss the Ladakh border issue with the Chinese President?
கோப்புப் படம் 

 

தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கிய ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட தலைவர்கள் இதில் ருஷ்ய அதிபர் புதின் காணொளி வாயிலாக பங்கேற்றார். இந்த உச்சிமாநாடு தற்போது நடந்து முடிந்துள்ளது. இதனை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.   

 

இந்த பிரிக்ஸ் கூட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங்கைச் சந்தித்து உரையாடுவார் என்பது தான். இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட நாட்டின் தலைவர்கள் இறுதியில் கூட்டாய் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதற்காக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் செய்தியாளர் சந்திப்பு மேடையை நோக்கி சென்றபோது இருவரும் பேசிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. 

 

கடந்த ஆண்டு நவம்பரில் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதன்பிறகு தற்போது பிரிக்ஸ் மாநாட்டின் இறுதியில் செய்தியாளர்களின் சந்திப்பிற்காக சென்றபோது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியுள்ளனர். பொதுவெளியில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் ஓராண்டு கழித்து தற்போது ஒருவரையொருவர் சந்தித்து பேசிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில் ஆகஸ்ட் 23 அன்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அதிகாரிகள் தரப்பிலும் தகவல்கள் வந்தன. 

 

இரு தரப்பிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து பிரச்சனைகள் சீரானது போல தெரிந்தாலும், கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீனா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சில உரசல்கள் தொடர்கிறது. சமீபத்தில், இந்தியாவும் சீனாவும் ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் 19வது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தியது. கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய இடங்களில் நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.