Skip to main content

இலங்கையில் குறையும் தமிழர்களின் எண்ணிக்கை; அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

 Declining number of Tamils ​​in Sri Lanka; The statistics are shocking

 

இலங்கையில் பூர்வீகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்ற இனப் பிரச்சனையால் நேரிட்ட போர், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், அதன் காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்தல் ஆகிய காரணங்களால் அகதிகளாக மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 

இது இலங்கை அரசு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களில் தெளிவாகத் தெரிகிறது. கிழக்கு மாகாணத்தில் சிங்களர், இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு தமிழ் மக்களின் மக்கள் தொகை இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் தமிழர்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளாக பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழர், மலையகத்தமிழர், தமிழ் பேசும் இஸ்லாமியர் என குறிப்பிடப்படும் வகையில் 1881 ஆம் ஆண்டு 24.9 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 11.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. திரிகோணமலையில் 1881-ல் 64.8 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 32.3 எனப் பாதியாகக் குறைந்துள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் 1963-ல் 28.8 சதவீதமாக இருந்த தமிழர்கள் எண்ணிக்கை 2012-ல் 17.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தப்பிய ஓடிய இலங்கை கடத்தல்காரர்கள்; சுற்றி வளைத்த தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் பயங்கரம்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Tamil Nadu fisherman chased away Sri Lankan smuggler in the middle sea

 

புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து தொடர்ந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு தங்கம் கடத்தி வருவதும் வழக்கமாகிவிட்டது. கடந்த வாரம் இலங்கைக்கு கடத்த கொண்டு சென்ற 30 கிலோ கஞ்சா பண்டல்களையும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

இந்த நிலையில்தான் நேற்று இரவு கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் ஒரு இலங்கை படகுடன் ஒரு இந்திய படகு அருகருகே நிற்பதைப் பார்த்த மீனவர்கள், அருகில் செல்லும் போது இந்திய படகில் இருந்து பண்டல்கள் இலங்கை படகுக்கு மாற்றியதும் வேகமாக சென்றுவிட்டனர். இலங்கை கடத்தல் படகில் வந்த அந்த 3 பேர் கொண்ட படகை விடாமல் துரத்திய மீனவர்களால், பிடிக்க முடியவில்லை.

 

அதே நேரத்தில் இந்திய படகில் இருந்து கஞ்சா பண்டல்களை இலங்கை படகில் மாற்றிய குமரப்பன்வயல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சங்கர்(32), செய்யாணம் பாண்டி மகன் ராஜதுரை (26) ஆகிய இருவரையும் கையோடு பிடித்து வந்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள், கடலோர காவல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி உள்ளிட்ட போலீசார் நடத்திய விசாரணையில் பல திருக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Tamil Nadu fisherman chased away Sri Lankan smuggler in the middle sea

 

இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரனையில், “ நான்(சங்கர்) டிப்ளமோ படித்துவிட்டு துபாயில் பல வருடங்கள் வேலை செய்தேன். பின்பு கொரோனா காலத்தில் ஊருக்கு வந்த நான், எனது தந்தையின் படகில் கடலுக்கு சென்று வந்த போது, கோட்டைப்பட்டினத்தில் ஷாப்பிங் சென்டர் நடத்திவருபவர் கொடுக்கும் பண்டல்களை நடுக்கடலில் நிற்கும் இலங்கை படகில் மாற்றி விட்டால், ஒரு முறைக்கு ரூ.20 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று, சங்கரின் சித்தப்பா ஆசை வார்த்தை கூறினார். அவரோடு சில முறை கஞ்சா பண்டல்களை கொண்டுபோய் மாற்றி விட்டோம்.

 

கஞ்சா பண்டல்களை தொடர்ந்து இலங்கைக்கு  கடத்தும் புதுக்கோட்டை பெண்ணிடம் நேரடியாக பேசும் போது, ஒரு முறை கடலுக்குள் போய் பண்டல்களை மாற்றினால் ரூ.50 ஆயிரம் கொடுக்கிறேன் என்றார். அப்படியே இப்போது பண்டல் கொண்டு போகனும், நீங்கள் கொண்டு போரிங்களான்னு கேட்டார். சரின்னு சொல்லி எங்க சொந்தக்காரரான, மலேசியாவில் இருந்து உறவினர் இறப்பிற்காக வந்த ராஜதுரையை அழைத்துகொண்டு, வன்னிச்சிப்பட்டினத்தில் செந்தில் என்பவரின் உணவு தயாரிப்பு கூடத்தில் இருந்து தலா 20 கிலோவில் 6 பண்டல்களை எடுத்துக் கொண்டு 5 நாட்டிக்கல் மைலில், அவங்க அடையாளம் சொன்ன இலங்கை படகில் மாற்றி விட்டோம். இது வரை 6 முறைக்கு மேல் கடத்தி இருக்கிறோம். 

 

இந்த கஞ்சா பண்டல்கள் புதுக்கோட்டை பெண் நேரடியாக கோட்டைப்பட்டினம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் நடத்தி வருபவர் மூலமாக இலங்கை பேசாலை நீயூட்டன், ராஜ் ஆகியோருக்கு அனுப்புறாங்க. எங்களுக்கு நடுக்கடலுக்குள் கொண்டு போய் மாற்றி விட கூலி கொடுப்பாங்க. ஆனால் இந்த முறை நாங்க மாற்றும் போது கோட்டைப்பட்டினம் மீனவர்கள், நாங்கள் கஞ்சா பண்டல் மாற்றும் போது பார்த்துட்டு விரட்டினாங்க. இலங்கை கடத்தல் படகு வேகமாக போயிட்டாங்க. ஆனாலும் நம்ம மீனவர்கள் விடாமல் விரட்டினாங்க. ஆனால் அவங்களை பிடிக்க முடியல. உடனே எங்களை பிடிச்சு வந்து உங்களிடம் ஒப்படைச்சுட்டாங்க” என்றார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Captured Tamil Nadu fishermen released

 

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்திருக்கிறது இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று சென்னை வந்தனர்.

 

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 14 ஆம் தேதி 15 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் சென்றார்கள். இலங்கை கடல் எல்லைக்குள் இவர்கள் புகுந்து விட்டதாகச் சொல்லி, 15 தமிழக மீனவர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தனர் இலங்கை கடற்படையினர். அவர்களுடைய இரண்டு விசைப் படகுகளையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று தங்கள் அலுவலகத்தில் அடைத்து வைத்தனர்.

 

கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் இந்திய கடல் எல்லையில்தான் மீன் பிடித்தனர் என்றும், இலங்கை கடல் எல்லைக்குள் அவர்கள் செல்லவில்லை என்றும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி இலங்கை கடற்படையினர்தான் நுழைந்தனர் என்றும் தமிழக மீனவர்கள் தகவல் அனுப்பினர். இந்தத் தகவலை தமிழக அரசின் கவனத்துக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கொண்டு சென்றனர். தமிழக அரசும் இதனை மத்திய அரசுக்கு தெரிவித்தது.

 

இதனையடுத்து இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியில் 15 தமிழக மீனவர்களையும் விடுவித்தது இலங்கை அரசு. விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரும் இலங்கையிலிருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்கின்றனர். 

 

சென்னை வந்த மீனவர்கள், “எங்களை விடுவிப்பதற்காக முயற்சி எடுத்த மீனவர் சங்கங்களுக்கும், மத்திய - மாநில அரசுகளுக்கும் நன்றி என்று சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் எங்களிடம் இல்லை” என்றனர் கண்ணீர் மல்க.

 

இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரையும், அவர்கள் சென்ற 3 விசைப் படகுகளையும் கைது செய்தது இலங்கை கடற்படை. இவர்கள் மீது எல்லை தாண்டுதல், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல், அனுமதியின்றி மீன் பிடித்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது இலங்கை கடற்படை.

 

இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தற்போது நிபந்தனைகளுடன் அவர்களை விடுதலை செய்துள்ளது நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களைத் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது இந்தியத் தூதரகம்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்