Skip to main content

வயதானவரை தாக்கிய முதலை... முதியவருக்கு வலியை காட்டிலும் அதிர்ச்சியை கொடுத்த அதன் பெயர்..!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ வழங்கிய முதலை ஒன்று முதியவரின் கையை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1972 ஆம் வருடம் ரஷ்ய விண்வெளி வீரர் விளாடிமிர் ஷடலோவுக்கு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஹிலாரி, காஸ்ட்ரோ என்ற பெயரில் இரண்டு  முதலைகளை பரிசாக அளித்தார்.அதன்பிறகு  இவ்விரு  முதலைகளும் மாஸ்கோ விலங்கியல் பூங்காவில் முறையாக  பராமரிக்கபட்டு வளர்க்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இங்கு வளர்ந்த முதலைகள் இரண்டும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்கான்சென் ஆக்வரியம் என்ற இடத்திற்கு  மாற்றப்பட்டு, அங்கு நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. மக்களும் அதை பார்த்து போட்டோ எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
 

vbcn



இந்நிலையில் இங்கு வன விலங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் பங்கேற்க வந்த 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர், அந்த முதலைகள் அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் நின்று உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது,  அவரது பின்னால் இருந்த கண்ணாடிக் கதவுகளில் இருந்து வெளியே தலை நீட்டிய ஒரு முதலை அவரது கையின் பின்புறத்தை கடித்தது. இந்த விபத்தில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் அருகே வீட்டிற்குள் புகுந்த முதலை!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
 crocodile entered a house near Chidambaram

சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் வசிப்பவர் அப்துல் ரஷீத். இவரது வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இவர் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தபோது வீட்டு வாசலில் முதலையைப் பார்த்துள்ளார். முதலையைப் பார்த்து சத்தம் போட்டதால் உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் எழுந்து கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முதலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சிதம்பரம் வனவர் பிரபு தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்து 8 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்ட முதலையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து முதலையைப் பத்திரமாக சிதம்பரம் அருகே உள்ள வக்ரமாரி ஏரியில் விட்டனர். முதலையைப் பிடித்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். 

Next Story

துரத்திய நாய்; பயந்து தண்ணீரில் இறங்கிய முதலை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
The dog that chased the crocodile; A scared crocodile got into the water

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறு, குளம் மற்றும் வாய்க்கால்கள் நிரம்பி வழிகிறது. இதனையொட்டி சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தின் அருகே ஓடும் வாய்க்காலில் அதிகளவு மழை நீர் செல்கிறது.

இந்நிலையில் இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரில் முதலைக்குட்டி ஒன்று அடித்து வந்துள்ளது. இந்த முதலை குட்டி வாய்க்காலின் கரையில் வியாழக்கிழமை மதியம் இரைதேடி படுத்திருந்துள்ளது. இதனை வாய்க்கால் கரையில் வந்த நாய் ஒன்று பார்த்து முதலையை கவ்வி பிடிக்க ஓடியது.  முதலை குட்டி நாய் வருவதை அறிந்து பயந்து போய் வாய்க்கால் தண்ணீரில் இறங்கியது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் வாய்க்கால் மற்றும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் முதலை மற்றும் முதலை குட்டிகள் தங்கி இருக்கும் வாய்ப்பு உள்ளது எனவே பொதுமக்கள் கால்நடைகள் வாய்க்காலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.