Skip to main content

ஷாப்பிங் சென்டரில் மாட்டுச் சாண வறட்டி விற்பனை..!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

ஒரு காலத்தில் இலவசமாகக் கிடைத்த வறட்டி இன்று அரிய பொருளாகி அதிகவிலையில் விற்பனையாக்கப்படுவதாகப் பலர் பேசினார். இந்நிலையில் ட்வீட்டரில் தற்போது சமர் ஹலான்கர் என்பவர் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஒரு கடையில் 10 மாட்டுச் சாண வறட்டி 2.99 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ214க்கு விற்பனைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 


இந்த விலை ஆன்லைனில் இந்த மாட்டுச் சாண வறட்டி விற்பனைக்கு வந்த விலையை விட மிகக் குறைந்த விலையாகும். மேலும் அவர் அந்த பதிவில் இப்பொழுது என் கேள்வி இது நாட்டு மாட்டுச் சாணமா? அல்லது அமெரிக்க மாட்டுச் சாணமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் அவர் பதிவிட்ட புகைப்படத்தில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தது. இந்த பொருள் பூஜை பயன்பாட்டிற்காக மட்டும் சாப்பிடுவதற்காக அல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர். நல்ல வேளையாக அதைக் குறிப்பிட்டுள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் மூலம் வெடிமருந்துகளை வாங்கிய நபர்; கோவை சம்பவத்தின் தொடர்ச்சியா? என்.ஐ.ஏ. விசாரணை

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

A person who purchased explosives online; NIA investigation whether it is a continuation of the Coimbatore incident

 

கோவையில் ஆன்லைனில் வெடிமருந்துகளுக்குத் தேவையான வேதிப்பொருட்களை வாங்கியதாக கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

 

விசாரணையில், கோவில்பட்டியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் மீதான கொலைமுயற்சிக்கு இந்த வெடிபொருட்களை வாங்கியது தெரியவந்தது. இருப்பினும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவ்விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால், முன்விரோதம் காரணமாக கொலைமுயற்சிக்காகத் தான் இந்த வெடிபொருட்கள் வாங்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கு குறித்தான அடுத்தகட்ட விசாரணையை கோவை மாநகரக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

 

கோவை மாநகரக் காவல்துறைக்கு இவ்விசாரணை மாற்றப்பட்ட பின் சரவணம்பட்டியில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்திலும் கர்நாடகாவின் மங்களூர் பகுதியிலும் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக இணையம் வழியாக வெடிமருந்துகளுக்குரிய வேதிப்பொருட்களை வாங்குபவர்கள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் தான் மாரியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

 

 

Next Story

பக்கென பதறவைக்கும் பக்கெட் விலை... அதிர்ச்சியில் அமேசான் வாடிக்கையாளர்கள்!

Published on 25/05/2022 | Edited on 26/05/2022

 

bucket price ... Amazon customers in shock!

 

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய அமேசானில் பிளாஸ்டிக் பக்கெட் விலை 25,999 ரூபாய் என்றும், பிளாஸ்டிக் குளியல் குவளையின் விலை 10 ஆயிரம் ரூபாய் என்றும் வெளியாகியுள்ள அறிவிப்பு அமேசான் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

ஃப்ளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா போன்ற ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களில் ஏ  டூ  இசட் என எல்லா பொருட்களுமே கிடைக்கும். மொபைல், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், விளையாட்டு பொருட்கள், இசைக்கருவிகள், ஆயத்த ஆடைகள் என அனைத்தும் குவிந்து கிடக்கும் ஆன்லைன் ஷாப்பிங் உலகத்தில் அமேசான் நிறுவனம் முன்னணி வகித்து வருகிறது.

 

இந்நிலையில் அமேசான் வலைப்பக்கத்தில் அன்றாடம் பயன்படுத்தும் 6 செட் கொண்ட சாதாரண பிளாஸ்டிக் பக்கெட் விலை 25,999 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த விலை தள்ளுபடி அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல் மார்க்கெட்டுகளில் 100 ரூபாய்க்கு கிடைக்கும் பிளாஸ்டிக் குளியலறை குவளைகள் 9,914 ரூபாய் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இஎம்ஐ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை உண்மையான விலையா அல்லது தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட பிழையா என ஒருபக்கம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் அமேசான் வாடிக்கையாளர்கள்.