Skip to main content

முத்தம் கொடுத்த போது விபரீதம்... பாலத்தில் இருந்து தவறிவிழுந்த காதல் ஜோடி பலி!

Published on 14/08/2019 | Edited on 14/08/2019


பெரு நாட்டை சேர்ந்த காதல் ஜோடிகள் மேத் எஸ்பினாஸ் மற்றும் ஹெக்ட்டார். இருவரும் பெத்தலேகேம் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். பாலத்தில்  இடையில் ஒரு இடத்தில் நின்று பேச தொடங்கி அவர்கள் பேச்சுவாக்கில் இருவரும்  பாலத்தின் தடுப்பு கம்பி மீது ஏறி அமர்ந்தனர். இருவரும் ஒரு கட்டத்தில் ஒருவருக்கொருவர் முத்தங்களை பறிமாறிக்கொண்டனர். இந்நிலையில், முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது இருவரும் நிலைதடுமாறி எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

 

f



சுமார் 60 அடி உயர பாலம் என்பதால் காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இந்த காட்சிகள் பாலத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சண்டையை நிறுத்த முத்தமிட முயன்ற கணவர்; நாக்கை கடித்துத் துப்பிய மனைவி

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

The husband tried to kiss her to stop the fight; The wife who bit her tongue and spit it out

 

ஆந்திராவில் குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை போட்ட மனைவியை சமாதானப்படுத்த கணவர் முத்தமிட முயன்ற நிலையில், மனைவி கணவரின் நாக்கைக் கடித்துத் துப்பிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த். இவருடைய மனைவி புஷ்பாவதி. இந்த தம்பதியர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனைகளுக்காக சண்டையிட்டுக் கொள்வதும் சமாதானம் ஆவதும் வாடிக்கையாகத் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று கணவன் மனைவியிடையே வழக்கம்போல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சண்டை வாக்குவாதமாக முற்றிய நிலையில், பிரச்சனையை முடிக்க முயன்ற கணவர் தாராசாந்த் மனைவியின் முகத்தைப் பிடித்து அவருக்கு உதட்டில் முத்தமிட முயன்றுள்ளார். ஆனால் ஆத்திரத்திலிருந்த மனைவி புஷ்பாவதி கணவரின் உதடு மற்றும் நாக்குப் பகுதியைப் பலமாகக் கடித்து இழுத்துள்ளார்.

 

இதனால் உதடு மற்றும் நாக்குப் பகுதியில் கடும் காயம் ஏற்பட்டு, சிதைந்து தொங்கிய நாக்குடன் தாராசாந்த் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தாராசந்த்தின் மனைவியை விசாரித்தனர். விசாரணையில், தனக்கு விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றதால், வலுக்கட்டாயமாக நாக்கைக் கடித்து இழுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இப்படி ஒரு வினோத சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

Next Story

போலிஸ் ஸ்டேஷன் முத்த புகழ் எஸ்.எஸ்.ஐ. இன்னோரு காதலியுடன் தலைமறைவு !

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

சோம்பரசம் பேட்டை காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு முத்தமிட்ட காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அது வாட்ஸ்அப் மற்றும் வலைதளங்களில் வைரலாக பரவியது. இது சம்மந்தமாக ஜீயபுரம் டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் நடத்திய அதிரடி விசாரணையில், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் மற்றும் எஸ்.எஸ்.ஐ பாலசுப்பிரமணியனிடம் விசாரித்த விவரம் ஆகியவற்றை அறிக்கையாக மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக்கிடம் கொடுத்தார்.

 

policeman

 

இதற்கிடையே பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் 3 பிரிவுகளின் கீழ் எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண் போலிஸ் சசிகலாவிடம் அன்றைய தினம் நடந்தது என்ன? என்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுவதை அறிந்த பாலசுப்பிரமணியன் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு தலைமறைவான சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உய்யகொண்டான் திருமலை அருகே உள்ள கொடாப்பு ஆகும். அவருக்கு மனைவி, மகள், மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அதே  ஊரைச்சேர்ந்த திருமணம் ஆன இன்னோரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. 

 

policeman

 

கடந்த 3 நாட்களாக அந்த பெண்ணையும் காணவில்லையாம். உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே பாலசுப்பிரமணியன் தனது தோழியையும் தன்னுடன் அழைத்து சென்று தலைமறைமானதாக ஏரியாக்காரர்கள் சொல்கிறார்கள்.. அதை உறுதி செய்யும் வகையில் போலீசார் விசாரித்துள்ளனர். தற்போது பாலசுப்பிரமணியன் அந்த பெண்ணுடன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, சோமரசம்பேட்டை போலீசார் ராஜபாளையம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

 

 

policeman

 

இதற்கிடையில் முத்த வீடியோ யார் வெளியிட்டது என்கிற பிரச்சனையில் அந்த ஸ்டேஷனில் ஏற்கனவே இருந்த இன்ஸ்பெக்டருக்கு வேண்டப்பட்ட ஏட்டு ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டார்கள் என்பதும். தற்போது ஏற்கனவே இருந்த இன்ஸ், அவருடைய வேண்டப்பட்ட ஏட்டு என ஆகியோர் மீது விசாரணை திரும்பி உள்ளது. ஒரு முத்தகாட்சி வெளியாகி இதை யார் வெளியிட்டது என்கிற விசாரணை பல்வேறு திருப்பங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.