உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,953 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,19,032 ஆக உயர்ந்துள்ளது. 173 நாடுகளுக்கு பரவிய நிலையில் கரோனா பாதிப்பில் இருந்து 84,795 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதிப்பால் இத்தாலியில ஒரே நாளில் 475 பேர் இறந்ததால், அந்நாட்டில் உயிரிழப்பு 2,978 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 35,713 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் 4,025 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் 3,245, ஈரானில் 1,135, ஸ்பெயினில் 638, அமெரிக்காவில் 151 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
பாகிஸ்தானில் கரோனாவுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது.