உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,065 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்று (26/03/2020) உலகம் முழுவதும் எண்ணிக்கை 22 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 24 ஆயிரமாக கரோனா பலி அதிகரித்துள்ளது.
உலகளவில் 170- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,31,609 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,23,391 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒரே நாளில் புதிதாக அமெரிக்கா 17,057, ஸ்பெயின் 8,271, இத்தாலி 6,203, ஜெர்மனியில் 6,615 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.