கரோனா அச்சம் காரணமாக இத்தாலி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறினால் மூன்று மாதம் சிறை என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் போக்குவரத்து ரத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் இந்த நாட்டில் சுமார் 1.5 கோடி பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
ADVERTISEMENT
சீனாவுக்கு அடுத்த படியாக இத்தாலியில் கரோனாவால் இதுவரை 366 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 7,374 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 1,09,978 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments