உலக நாடுகள் அனைத்திலும் சுகாதாரம், தொழில், கல்வி என அனைத்து அம்சங்களையும் சீர்குலைய வைத்தகரோனாஜப்பானில் ஆட்சியையேஅசைத்துப் பார்த்துள்ளது.ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்து வந்தஷின்சோஅபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகியநிலையில்யோஷிஹிதேசுகாபுதியபிரதமராகப்பதவியேற்றுச்செயல்பட்டு வந்தார். ஆனால்யோஷிஹிதேசுகாதலைமையிலான அரசுகரோனாதொற்று பரவலைக் கையாண்ட விதம் மக்களிடையே கடும் அதிருப்திஏற்படுத்தப்பதவியைத்துறக்கும்முடிவை எடுத்தார்யோஷிஹிதேசுகா. இதற்கும்யோஷிஹிதேசுகாகடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில்தான்பதவியேற்றிருந்தார். இந்நிலையில்யோஷிஹிதேசுகா, தான் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லைஎன அறிவித்ததால், ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போதுசுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில்ஃபுமியோகிஷிடாவெற்றி பெற்றுள்ளார்.
தற்பொழுதுபுதியபிரதமராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளஃபுமியோகிஷிடாமுன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். முதல் சுற்றில்சனேட்காய்சி, சிக்கோநோடாஎன்ற இரண்டு பெண் வேட்பாளர்களை எளிதில் தோற்கடித்தஃபுமியோகிஷிடாவுக்குபெரும் சவாலாக இருந்தவர்மற்றொரு வேட்பாளரான தடுப்பூசி அமைச்சரானடேராகோனா. இருவருக்கும்இடையே கடும் போட்டி நிலவிய நிலையில்இறுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்ஃபுமியோகிஷிடா.
ஜப்பான் நாடாளுமன்றத்தில் வரும் 4ஆம் தேதி புதிய பிரதமராகஃபுமியோகிஷிடாபதவியேற்க உள்ளார். உட்கட்சி தேர்தலில் வெற்றி எளிதாகக் கிடைத்திருந்தாலும்கரோனா, பொருளாதார சரிவு, தொழில்கள் நலிவடைவு என பல்வேறு சவால்கள்கிஷிடாமுன்னும்காத்திருக்கின்றன.