Advertisment

கரன்சி மூலம் வைரஸ் பரவல்..? சீன வங்கி அதிகாரிகள் நடவடிக்கை!

சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 60,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1500-க்கும் மேற்பட்டவர்கள்உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் சீனா முழுவதும் அதிகமாக இருப்பதால் அந்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் விரைவில் நடைபெற இருக்கின்ற உலக தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டையும் சீன அரசு ரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பணத்தின் வாயிலாக கொரோனா வைரல் பரவலை தடுக்க வங்கி அதிகாரிகள் புதிய முறையை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்காக கரன்சி மீது புற ஊதா கதிர்கள் அல்லது அதிக வெப்பநிலையை பயன்படுத்தி யுவான் நோட்டுகளில் உள்ள கிருமிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

Advertisment

rupees
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe