Skip to main content

உச்சத்தில் கோரோனா பீதி - பிளாஸ்டிக்கால் உடலை மறைத்தப்படி பயணம்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 
 

K



இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலில் நாட்டில் நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அந்நாட்டு மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள். நேற்று முன்தினம் ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலில் நான்கு பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பயத்தால் இளம் ஜோடி ஒன்று பிளாஸ்டிக்கால் தங்கள் உடலை மூடியபடி விமானத்தில் பயணிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

 

சார்ந்த செய்திகள்