Advertisment

கொரோனா வைரஸ் இருப்பதாக பீதியை கிளப்பிய வாலிபருக்கு சிறை!

கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் சில உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1110 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர் ஒருவர் கீழே விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்த சிலர் அவரை காப்பாற்ற முயற்சிக்கவே, சிலர் கொரோனா வைரஸ் என்று கத்தியுள்ளனர். இதனால் உதவி செய்த வந்தவர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். இந்நிலையில், ரயில் நிலையம் வந்ததும் மயக்கம் அடைந்த இளைஞர் எழுந்து, ரயிலில் இருந்து வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்ததில், மக்களை ஏமாற்ற பிராங் செய்ததாக கூறியுள்ளார். அவரை கைது செய்த போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisment
corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe