/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ch_27.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 6லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 1,44,22,125 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 86,11,236 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 52 ,06,070 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்காவில் அதிகப்படியான இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)