Advertisment

தஞ்சையில் அதிகரித்த பாதிப்பு-தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்!

corona rate Increased in Tanjore - Today's corona situation in Tamil Nadu!

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது1,631லிருந்து அதிகரித்து 1,631ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விடச் சற்று அதிகம். கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த ஒருநாள்தொற்றுநான்காம்நாளாகஇன்றும்அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,58,623 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 170 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 174 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.தஞ்சையில் நேற்று 87ஆகஇருந்த ஒரு நாள் கரோனாபாதிப்பு இன்று 117 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில்27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,146 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,399 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,517பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,80,686 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை-224, ஈரோடு-151, செங்கல்பட்டு-120, திருவள்ளூர்-58, தஞ்சை-117, நாமக்கல்-52, சேலம்-55, திருச்சி-45, திருப்பூர்-91 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Tamilnadu Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe