Skip to main content

எப்போது முடிவுக்கு வரும் கரோனா பெருந்தொற்று? - உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தகவல்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021


 

WHO CHIEF

 

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த கரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலகின் மற்ற பகுதிகளிலும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தநிலையில், உலக சுகாதார உச்சி மாநாட்டில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கரோனாவைப் பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது நம் கைகளில்தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "உலகம் அதை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கும்போது தொற்றுநோய் பரவல் முடிவடையும். அது நம் கையில்தான் உள்ளது. பயனுள்ள பொதுச் சுகாதார கருவிகள் மற்றும் பயனுள்ள மருத்துவ கருவிகள் என நமக்குத் தேவையான அனைத்து கருவிகளும் உள்ளன. ஆனால் உலகம் அந்த கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. ஒரு வாரத்திற்குக் கிட்டத்தட்ட 50,000 பேர் இறக்கிறார்கள். தொற்றுநோய் முடிவடைவதற்கான நேரம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 8013 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 16,765 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தினசரி கரோனா சதவீதம் 1.11 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது 1 லட்சத்து 2 ஆயிரத்து 601 பேர் கரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 5 லட்சத்து 13 ஆயிரத்து 843 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

6 முதல் 8 மாதங்களில் அடுத்த கரோனா அலை - மருத்துவ நிபுணர் கணிப்பு!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 16 ஆயிரத்து 51 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், இன்று 13,405 பேருக்கு கரோனா உறுதியானது. இந்தநிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தேசிய கரோனா பணிக்குழுவின் இணை தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், 6 முதல் 8 வாரங்களில் அடுத்த கரோனா அலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், “வைரஸ் நம்மை சுற்றி இருக்கப்போகிறது. இன்னொரு புதிய வகை கரோனா மாறுபாடு பரவும்போது ஒரு கரோனா அலை ஏற்படும். அது எப்போது என நமக்கு தெரியாது. ஆனால் ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை புதிய வகை கரோனா பரவுகிறது என வரலாறு கூறுகிறது” என தெரிவித்துள்ளார்.

 

அதேநேரத்தில் தற்போது அதிகம் பரவி வரும் ஒமிக்ரானின் துணை மாறுபாடு பிஏ.2, இன்னொரு கரோனா அலையை ஏற்படுத்தாது எனவும் ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.