Skip to main content

பிரிட்டன் பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கரோனா

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின்  இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்களையும் கரோனா விட்டுவைக்கவில்லை. 

 

Corona to Health Minister after Prime Minister

 

ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லஸ்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று மாலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அவரே வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுது பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹென்ஹாக்கிற்கும் கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
King Charles of England has cancer

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு (வயது 73) புற்றுநோய் இருப்பது இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், நேற்று முதல் அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சைக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரோஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; ஹாலிவுட்டையே மிஞ்சும் ரியல் ஹைஜாக்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

A ship stuck in the middle of the sea; a real hijack that surpasses Hollywood


நடுக்கடலில் கப்பல் ஒற்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் ஹைஜாக் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரிட்டனை சேர்ந்த தனியார் நபரின் 'கேலக்ஸி லீடர்' என்ற கப்பல் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜப்பானிய நிறுவனம் இயக்கிவந்த இந்த கப்பலை ஹெலிகாப்டர் மூலம் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், திடீரென கப்பலில் இறங்கி கப்பல் கேப்டனை துப்பாக்கி முனையில் மிரட்டி, கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பலை ஹைஜாக் செய்தது யார் என்று தெரியாத நிலையில், ஹவுதி நாட்டின் டிவி சேனல்களில் கப்பலை ஹைஜாக் செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாலிவுட் தரத்தையும் தாண்டும் அளவிற்கான இந்த ரியல் ஹைஜாக் காட்சிகள் உலக அளவில் பேசுபொருளாகி வருகிறது.

 

இந்நிலையில் கப்பலில் சிக்கியுள்ள 25 குழுவினர்களும் இஸ்லாமிய சட்டப்படி நடத்தப்படுவர் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.