ADVERTISEMENT
ADVERTISEMENT
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு கரோனா இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடந்த சில நாட்களாக தொண்டையில் வலி இருந்ததால், கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில், கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நலமுடன் இருக்கிறேன். மிச்சல் ஒபாமா கரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டுள்ளார். பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார். அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்தாலும், நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை என்றால், விரைவில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்" என்று பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
ADVERTISEMENT
Show comments