Advertisment

"மீண்டும் கரோனா பரவல்; விதிமுறைகளை மீறினால் 9 லட்சம் அபராதம்!"

ுப

Advertisment

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதன் தாக்கம் என்பது மின்னல் வேகத்தில் உள்ளது. அதுவும் கடந்த 20 நாட்களாக தினமும் 90 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. உலக அளவில் இந்தியா இந்த எண்ணிக்கையில்முதல் இடத்தில் இருந்து வருகின்றது. அதே போல சில நாடுகளில் கரோனா மீண்டும் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது. இதற்கிடையே கரோனா காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறினால் 10,000 யூரோஅபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு கிட்டதட்ட ஒன்பது இலட்சங்கள் ஆகும்.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe