fjh

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Advertisment

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா முதலிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருந்து வருகின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனை தடுப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் அதன் தாக்கம் உச்சகட்டத்தில் இருந்து வருகின்றது. வளர்ந்த நாடுகளிலும் அதன் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில் கரோனா வைரஸிடம் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 7.28 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.97 கோடியை தாண்டியுள்ளது. இதில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமான வகையில் இருந்து வருகின்றது. 1.27 கோடி பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.