Advertisment

மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது! 

தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் நடைபெற்ற நிகழ்வில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

Advertisment

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு போப் பிரான்ஸிஸ் புனிதர் பட்டத்தை வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Advertisment

இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

முன்னதாக, புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடப்பட்டதை அமைச்சர் மனோ.தங்கராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

VATICAN CITY
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe