Skip to main content

9 நாளில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையை மூடிய சீனா... காரணம் இதுதான்!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 11,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

  fg



உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் இந்த கரோனா வைரஸ் சீனாவில் உருவானதாக நம்பப்படுகின்றது. சீனாவில் உள்ள உகான் நகரில் இந்த தொற்று மிக வேகமாக பரவியது. பல ஆயிரம் பேருக்கு சில நாட்களிலேயே இந்த தொற்று பரவியது. இதனால் விழிப்படைந்த சீனா அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவமனையை 9 நாட்களிலேயே கட்டி முடித்தது. இந்நிலையில் தற்போது சீனாவில் இந்த நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கடைசி நோயாளியும் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், அந்த மருத்துவமனையை சீனா மூடியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்