ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்திருப்பதாகவும் அங்குள்ள நிலை குறித்து அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஸி முறையிட்டார். இதுதொடர்பாக கடந்த 12 ஆம் தேதி அவர் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
பாகிஸ்தான் வேண்டுகோளை சீனாவும் இப்போது வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு கவுன்சிலின் ரகசியக்கூட்டத்தை கூட்டி விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் சீனா வேண்டுகோளை ஏற்று இதுபோன்ற விவாதம் நடைபெற்றது. நான்கு மாதங்கள் முடிந்த நிலையில் இப்போதும் அங்கும் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் நிலவும் மனித உரிமைப் பிரச்சனைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.