Skip to main content

"அவ உன் பொண்டாட்டி இல்ல.... என் மகள்...!" - மகனுக்கு அதிர்ச்சி கொடுத்த தாய்.!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

china marriage incident

 

தனது சகோதரனையே மணப்பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. சீனாவில் ஜியாங்க்சு பகுதியில் வசிக்கும் மணமகனுக்கும், மணமகளுக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். சில நிமிடங்களில் திருமணம் நடைபெற உள்ளது என்ற சந்தோஷத்தில் மணமகனும், மணமகளும் இருக்க பூகம்பம் வெடித்தது.

 

திருமணத்திற்குத் தயாரான மணமகளைப் பார்த்த, மணமகனின் தாய்க்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பிறப்பில் இருந்தே இருக்கும் தழும்பு ஒன்று, மணமகளின் உடலில் இருக்க அதனைப் பார்த்த மணமகனின் தாய், அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி மணமகளின் குடும்பத்தாரிடம் அவரின் உண்மையான தாய், தந்தை குறித்து விசாரித்தார். அப்போதுதான் அந்தத் தகவல் அனைவரையும் திடுக்கிடச் செய்ததது. மணமகளை 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் தத்தெடுத்து தங்களது மகளாக வளர்த்துவந்ததாக அவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.

 

அதே 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது பெண் குழந்தையை மணமகனின் பெற்றோர் தொலைத்துள்ளனர். அந்தப் பெண் தான் இந்த மணமகள் என்பதை அவளது உடலில் இருந்த தழும்பைக் கொண்டு மணமகனின் தாய் கண்டறிந்தார். இந்த தகவலை அறிந்ததும் தன்னை பெற்றெடுத்த நிஜத் தாயைக் கட்டியணைத்துக் கொண்டு மணமகள் அழுதார். இதன் மூலம் மணமகனுக்கு, மணமகள் சகோதரி உறவு முறையாவதால் அனைவரும் செய்வதறியாது திகைத்தனர்.

 

அப்பொழுது வேறொரு அதிர்ச்சி தகவலையும் மணமகனின் பெற்றோர் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். அதாவது தங்களது பெண் குழந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து விட்டதால் வேறொரு ஆண் குழந்தையை எடுத்து தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும், அவன் தான் இந்த மணமகன் என்றும் கூறினர். இதனைக் கேட்டதும் உறவுமுறையில் தாங்கள் சகோதரன், சகோதரி இல்லை என்ற ஆனந்தத்தில் மணமகனும், மணமகளும் திளைத்திருக்க இருவருக்கும் நிச்சியம் செய்தபடி திருமணம் நடைபெற்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.