Advertisment

பொதுமக்களை தாண்டி சிறை கைதிகளையும் வாட்டி வதைக்கும் கொரோனா - அதிர்ச்சியில் சீனா!

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சீனாவில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 450க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த பாதிப்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் சிறையில் இருக்கும் காவலர்களுக்கும் அந்த பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் தற்போது உறுதி செய்துள்ளார்கள்.

Advertisment
Prison
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe