ADVERTISEMENT

கரோனா தோற்றம் குறித்த ஆய்வு : நிபுணர்குழுவுக்கு அனுமதி தராத சீனா 

03:37 PM Jan 06, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

எனவே கரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய, உலக சுகாதார நிறுவனம் அறிவியல் நிபுணர்கள் குழுவை அமைத்தது. இதனையடுத்து அந்த அறிவியல் நிபுணர்குழு உறுப்பினர்கள் சீனாவிற்குப் பயணத்தை தொடங்கிய நிலையில், தங்கள் நாட்டிற்குள் அந்த அறிவியல் நிபுணர்குழு வருவதற்கு சீனா அனுமதி தரவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், “சீனாவிற்கு நிபுணர்குழு செல்வதற்குத் தேவையான அனுமதிகளை சீன அதிகாரிகள் இன்னும் இறுதி செய்யவில்லை என்பதை இன்று நாங்கள் அறிந்தோம். இந்த செய்தி குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இரண்டு உறுப்பினர்கள் ஏற்கனவே தங்கள் பயணங்களைத் தொடங்கியுள்ளனர். மற்றவர்கள் கடைசி நிமிடத்தில் பயணிக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இந்த பணி ஐ.நா. சுகாதார நிறுவனத்திற்கு முன்னுரிமை என்பதைத் தெளிவுபடுத்தினேன். நிபுணர்குழுவுக்கு சீனாவில் ஆய்வு செய்யும் அனுமதியை வழங்குவதற்கான உள்நடைமுறைகளை வேகப்படுத்துவதாக அந்த நாடு உறுதியளித்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT