Skip to main content

இஸ்ரேலைத் தொடர்ந்து இந்த நாட்டிலும் பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

chile

 

உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் அண்மையில் இஸ்ரேல் நாடு, பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்த தொடங்கியுள்ளது. இந்தநிலையில் இஸ்ரேலைத் தொடர்ந்து தற்போது லத்தின் அமெரிக்கா நாடான சிலியும் பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசியை செலுத்த தொடங்கியுள்ளது.

 

முதலில் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கும், பிறகு 55 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் இந்த நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது. 19 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிலி நாட்டில் இதுவரை 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அந்தநாட்டில் மூன்று வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சிலி நாட்டில் 11.3 மில்லியன் மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

286 முறை கிரெடிட் ஆன சம்பளம்... தலைமறைவான ஊழியர் !

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

286 times credited salary ... employee disappearance!

 

ஊழியர் ஒருவருக்கு ஒருமுறைக்குப் பதிலாக 286 முறை சம்பளம் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆன நிலையில்  'போதுமடா சாமி' என மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஊழியர் தலைமறைவான சம்பவம் சிலி நாட்டில் நிகழ்ந்துள்ளது.

 

சிலி நாட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு அவர் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து வழக்கம்போல் மாத சம்பளம் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகியுள்ளது. ஆனால் சம்பளம் வருவதற்கான மெஸேஜை பார்த்த அந்த ஊழியர் சற்று தலைசுத்திதான் போயிருப்பார். காரணம் கிரெடிட் ஆனது ஒரு மாத சம்பளம் அல்ல 286 மாதங்களுக்கான சம்பளம். ஆம் 286 முறை சம்பளம் கிரெடிட் ஆகியிருப்பது அந்த ஊழியருக்கு வியப்பைக் கொடுத்தது. ஒரு மாத சம்பளம் 500,000 சிலியன் பெஸோஸ் ( இந்திய மதிப்பில் ரூ.43,000 ). அவர் பணிபுரியும் நிறுவனம் இவருக்கு வழங்கிய சம்பளம் 165,398,851 சிலியன் பெஸோஸ். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1.42 கோடி ஆகும். இந்த தவறை உணர்ந்த நிறுவனம் பணத்தைத் திரும்பக் கொடுக்கச் சொல்லி அவரை தொடர்பு கொண்ட பொழுது வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்து வருவதாக அந்த ஊழியரும் சொல்லிச் சென்றுள்ளார்.

 

நிறுவனமும் பணம் வந்துவிடும் என்று காத்திருந்தது. போனவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, வங்கியிலிருந்து பணம் வந்ததற்கான குறுஞ்செய்திகளும் வரவில்லை. அதன்பிறகு அவரை தொடர்புகொள்ள முயன்ற போது அந்த நபரும் பதிலளிக்கவில்லை. சில மணி நேரம் கழித்து அந்த நபரே நிறுவனத்திற்குத் தொடர்புகொண்டு உறங்கிவிட்டதாகச் சொல்லி, இனிமேல் தான் வங்கிக்குச் செல்லவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 

ஆனால் கடந்த ஜூன் 2 ஆம் தேதி அலுவலகத்திற்குச் சென்று தான் வேலையை ராஜினாமா செய்வதாகச் சொல்லிவிட்டு நிறுவனம் தவறுதலாகக் கொடுத்த சம்பளத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாராம். தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகிறதாம் அந்த நிறுவனம்.

 

 

Next Story

முகக்கவசம் அணியாத அதிபர்; இரண்டரை லட்சம் அபராதம் விதித்த நாடு!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020
chile president

 

 

சிலி நாட்டின் அதிபராக இருப்பவர் செபாஸ்ட்டியன் பீன்யேரா. இவர், டிசம்பர் மாத தொடக்கத்தில் முகக்கவசம் இல்லாமல், ஒரு பெண்ணோடு எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் பரவியது.

 

இதனைத்தொடர்ந்து, கரோனா தடுப்பு விதிகளை மீறி முக்கவசம் அணியாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டதற்காக மன்னிப்பு கோரிய அவர், தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் கடற்கரையில் தனிமையில் நடந்து சென்றபோது அந்த பெண் தன்னிடம் வந்து ஒன்றாகப் புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கூறியதாக விளக்கம் அளித்தார்.

 

இருப்பினும் அதிபர் செபாஸ்ட்டியன் பீன்யேராவுக்கு, அந்நாட்டு அரசு 3500 டாலர் அபராதம் விதித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 2.57 லட்சம் ரூபாய் ஆகும்.