Skip to main content

அரசு வேலை; எலிகளைப் பிடித்துக் கொடுத்து மாதம் 11 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுங்கள்

Published on 04/12/2022 | Edited on 04/12/2022

 

Catch the rats and give them; Get Salary 11 lakh 50 thousand per month

 

எலிகளைப் பிடிக்க ரூ.1 கோடியே 38 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்காவில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ள நகரங்களில் ஒன்று நியூயார்க். இந்த ஆண்டில் மட்டும் எலித் தொல்லைகள் எனக்கூறி 21,600 புகார்கள் மாவட்ட நிர்வாகத்திடம் குவிந்தது. அனைத்து இடங்களிலும் எலித் தொல்லைகள் அதிகரித்ததால் பொதுமக்கள் பொறுமை இழந்து மாநகர நிர்வாகத்திற்குக் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். 

 

இதனைத் தொடர்ந்து நியூயார்க் நகர மேயர் எரி ஆடம்ஸ் எலிகளை ஒழிக்க புதிய பதவியினை உருவாக்கியுள்ளார். மேலும் இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையையும் வெளியிட்டுள்ளார். எலிகளை ஒழிக்கும் பணிக்கு எலிகளை ஒழிப்பதற்கான இயக்குநர் எனும் பெயரை வைத்துள்ளனர். பணிக்கான தகுதிக் குறிப்புகளாக நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள், எலியைக் கட்டுப்படுத்தும் பணிக்கு புதிய உத்திகளை உருவாக்குபவர்கள் மேலும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

 

பணியில் சேருபவர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத மதிப்பில் 11 லட்சத்து 50 ஆயிரம். இது குறித்த அறிவிப்பு வெளியானதும் நியூயார்க் நகர மக்கள் இது குறித்து கேலி வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தையின் மரணம்... நியூயார்க் போலீஸில் சாதித்துக் காட்டிய இந்திய வம்சாவளி பெண்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

new york police pratima bhullar maldonado oppited captain 

 

நியூயார்க் காவல்துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பிரதிமா புல்லர் மால்டோனாடோ என்பவர் தனது ஒன்பது வயது வரையில் இந்தியாவில் வளர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு தான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார். டாக்சி டிரைவராக இருந்த இவரது தந்தை கடந்த 2006 ஆம் ஆண்டு காலமான நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக நியூயார்க் காவல்துறையில் காவலராக இணைந்த பிரதிமா அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் உள்ள சவுத் ரிச்மண்ட் ஹில்லில் என்ற இடத்தில் 102வது போலீஸ் வளாகத்தை நடத்தி வருகிறார்.

 

மேலும் தனது கடின உழைப்பால் காவல் துறையில் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்ற பிரதிமாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் காவல்துறையில் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெற்ற இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையுடன், நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெறும் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் பிரதிமா பெற்றுள்ளார். பிரதிமாவிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பிரதிமாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

லிப் ஃபில்லரால் நேர்ந்த அவலம்; ஓவர்டோஸ் உதட்டுக்கும் ஆகாது

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

Lip fillers suffer from lip fillers; an overdose does not happen to the lips either

 

நவீன உலகில் முக அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முகத்தை சீரமைப்பது என பல்வேறு முறைகள் வந்துவிட்ட போதிலும் எதுவுமே அளவிற்கு அதிகமானால் தீமை என அடிக்கடி மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. குறிப்பாக மாடலிங் துறையைச் சேர்ந்த அழகிகள் மற்றும் நடிகைகள் தங்களை அழகாகக் காட்டிக்கொள்ள இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி ஒரு சிகிச்சை முறையால் மாடலிங் அழகி ஒருவர் அலங்கோலமாகியுள்ளது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Lip fillers suffer from lip fillers; an overdose does not happen to the lips either

 

லிப் ஃபில்லர் என்ற முறை ஒன்று அண்மையில் பிரபலமாகி வருகிறது. அதாவது உதடுகளை அழகாக எடுத்துக் காட்டுவதற்காக இந்த சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஊசி மூலம் சில குறிப்பிட்ட மருந்தை உதட்டில் செலுத்தினால் உதடுகள் அழகாக மாறுமாம். இந்த சிகிச்சையை பல்வேறு பிரபலங்களும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நியூயார்க்கை சேர்ந்த ஜெசிகா என்ற மாடல் அழகி ஒருவர் இந்த சிகிச்சையை எடுத்துள்ளார். ஒருமுறை இருமுறை அல்ல ஆறு முறை எடுத்துக் கொண்ட சிகிச்சை ஓவர்டோஸ் ஆகி உதடுகள் வீங்கி அலங்கோலமாக மாறியுள்ளார். சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அந்த நடிகை, ''கிளினிக்கில் இருந்த மருத்துவர் புதிய லிப் ஃபில்லர் வந்துள்ளது எனவும், இலவசமாக செலுத்தி விடுகிறேன் என்றும் கூறி சிகிச்சை மேற்கொண்டதால் தற்பொழுது என்னுடைய உதடுகள் இப்படி மாறிவிட்டது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.