இங்கிலாந்து நாட்டில் மில்டன் கெயின்ஸ் நகர போலீசார் சமீபத்தில் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிந்த செய்தி நகைச்சுவையாய் இருந்தது. அந்தப் பதிவின்படி நந்தினி சின்ஹா என்பவரிடம் வாகன உரிமத்தை வாங்கி பரிசோதனை செய்த பொழுது அதிலிருந்த பெயரும், புகைப்படமும் அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள மில்டன் கெயின்ஸ் நகரில் போலீசார் அன்று சிக்னலில் நிற்காமல் சென்ற நந்தினி சின்ஹா என்பவரை பின்தொடர்ந்து அவரின் வாகன உரிமத்தை வாங்கிப் பார்த்த பொழுது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அதில் நந்தினி சின்ஹாவின் பெயரோ, புகைப்படமோ, முகவரியோ, பிறந்த தேதியோ இல்லை. அதற்கு பதிலாக குழந்தைகள் ரசித்துப் பார்க்கும் கார்டூன் கதாபாத்திரமான "ஹோமர் சிம்ப்சன்" புகைப்படம், அதன் பெயரிலே கையொப்பம் என அனைத்தும் இருந்தது. அதனால் போலீசார் நந்தினி சின்ஹாவை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து மில்டன் கெயின்ஸ் போலீசார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் "ஓட்டுனரின் கார் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் முறையான வாகன ஓட்டுனர் உரிமம் இல்லை, இது தான் இருந்தது" என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பதிவு செய்திருந்தனர்.
லைசென்ஸில் கார்ட்டூன் பாத்திரம், அதிர்ச்சியில் போலீசார்!
சார்ந்த செய்திகள்
Next Story
உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!
ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார். இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.