Advertisment

"பதவியில் இருந்து விலக முடியாது"- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டம்!

publive-image

Advertisment

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலக முடியாது என்று இம்ரான் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை, அதன் முக்கிய கூட்டணி கட்சியான எம்கியூஎம் கட்சி திடீரென வாபஸ் பெற்றுள்ளது. இதனால் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்திருக்கிறது.

மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 172 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். ஆனால் எம்கியூஎம் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதால், இம்ரான் கான் அரசுக்கான ஆதரவு 164 ஆக குறைந்துள்ளது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைவது ஏறக்குறைய உறுதிச் செய்யப்பட்டுவிட்டது.

Advertisment

இந்த நிலையில், இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, "பாகிஸ்தானில் நிலவும் தற்போதைய நெருக்கடிகள் அனைத்திற்கும், அமெரிக்காவே காரணம். தன் அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். பாகிஸ்தான் அடிமையாக இருக்கப் போகிறதா?, சுதந்திரமாக இருக்கப் போகிறதா? என்பதை வாக்கெடுப்பே முடிவு செய்யும். சுதந்திரமான, வெளிப்படையான வெளியுறவுக் கொள்கைகள் பாகிஸ்தானுக்கு அவசியம். கடைசி பந்து வரை நின்று விளையாடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Pakistan Parliament
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe