COVAXIN

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதனையடுத்து விரைவில் கோவாக்சினுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஐந்தாம் தேதி கூடிய உலக சுகாதார நிறுவனத்தின் 'நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு' கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின்தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, வரும் 26ஆம் தேதி கூடிகோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கவுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவதுகுறித்து தனது முடிவை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில்கோவக்சினுக்கு அவசரக்கால அங்கீகாரம் வழங்குவது தாமதமாவதாகச் சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில்உலகில் சுகாதார நிறுவனம், அவசரம் அவசரமாக கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அனுமதி வழங்கமுடியாது எனத்தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகஉலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அவசரக்கால பயன்பாட்டுப் பட்டியலில் கோவாக்சின் சேர்க்கப்படுவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்குப் பலர் காத்திருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களால் அவசர அவசரமாக அந்த பரிந்துரையைச் செய்ய முடியாது. அவசர பயன்பாட்டிற்கு ஒரு தயாரிப்பைப் பரிந்துரைப்பதற்கு முன், அது பாதுகாப்பானதா, செயல்திறன் வாய்ந்ததா என்பதை உறுதிப்படுத்த நாம் அதை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளது.