நடுவானில் பறக்கும்போது ஏற்பட்ட திடீர் விபத்தால் சிறிய ரக விமானம் ஒன்றில் பயணித்த 7 பெரும் உயிரிழந்த சம்பவம் கனடா நாட்டில் நடந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொராண்டோவில் இருந்து கிங்ஸ்டன் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று 3 சிறுவர்கள் உட்பட 7 பேருடன் புறப்பட்டு சென்றுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த அந்த விமானம் மாயமானது. இதையடுத்து, காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த நிலையில், கிங்ஸ்டன் நகரின் அருகில் உள்ள சிறிய வான்பரப்பில் அந்த விமான விழுந்து நொறுங்கியிருப்பது கன்டுபிடிக்கப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததாள், விமானம் தரையில் விழுந்து வெடித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோரவிபத்தில் விமானத்தில் பயணித்த 3 சிறுவர்கள் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.