Skip to main content

கரோனா தடுப்பூசி - கனடா பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

canada

 

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. தற்போது உலகில் பயன்பாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

 

கனடா ஏற்கனவே பைசர் தடுப்பூசியை 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தலாம் என அனுமதி அளித்திருந்தது. இந்தநிலையில் கனடா, தற்போது 12 - 15 வயதினருக்கும் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கனடாவின் சுகாதாரத்துறை, மூன்றுகட்ட ஆய்வக பரிசோதனை முடிவுகளின்படி இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

 

மேலும், 12 - 15 வயதினரிடையே இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் உள்ளதெனவும் கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கனடா நாட்டில் கரோனா பாதிக்கப்பட்ட 20 சதவீதம் பேர் 19 வயதிற்கும் குறைவானவர்கள். எனவே 19 வயதுக்கும் குறைவானவர்களுக்கு கரோனா பரவுவதை தடுக்கும் வகையில், 12 - 15 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்தொடர்ச்சியாக கனடாவில் கரோனா பரவல் அதிகமுள்ள மாகாணமான ஆல்பர்ட்டா மாகாணத்தில் திங்கட்கிழமை முதல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பைசரை தொடர்ந்து மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் ஆகிய நிறுவனங்களும் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஒப்புதல் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மாடர்னா நிறுவனம், தங்களது தடுப்பூசி 12 - 17 வயதினரிடையே 96 சதவீத செயல்திறன் கொண்டிருக்கிறது என்று முதற்கட்ட ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.

 

இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுமென்றும், அது குழந்தைகளைப் பாதிக்கும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.