Skip to main content

பணம் சம்பாதிக்க பறவை முதல் பாம்பு வரை சமைத்து உண்ட இளம் தம்பதி!!!

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

 

கம்போடிய நாட்டை சேர்ந்த அன் லின் டச் மற்றும் அவரது கணவர் பௌன் ராட்டி இணைந்து ஒரு யூடீயூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தனர். இதில் எதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்பதர்காக அவர்களின் வீட்டிற்கு அருகில் மார்க்கெட்டிற்கு  சென்று அங்கு   பாம்பு வகைகள், பறவைகள், விலங்குகளை வாங்கி  அனைத்தையும் கொன்று சமைத்து உண்ணுகின்ற வீடியோவினை  யூடீயூப் சேனலில்  பதிவிட்டு வருமானம் ஈட்டிவந்தனர்.

 

cambodiya cuple eat domestic animals

 

இதனை பார்த்த சூற்றுசூழல் அமைச்சகம் இந்த தம்பதியை கைது செய்து விசாரணை நடத்திவருகிறது. இந்த விசாரணையின் போது அந்தத்தம்பதி கூறியது. " இந்த யூடீயூப் சேனலை கடந்த டிசம்பர் மாதம்தான் தொடங்கினோம். நாங்கள் இந்த விலங்குகளை மார்க்கெட்டில் வாங்கித்தான் சமைத்து உண்டு வீடியோவாக பதிவிட்டோம்.  

cambodiya cuple eat domestic animals

 

இதுபோன்ற வன விலங்குகளை கொன்று உண்ணக்கூடாது என்று சத்தியமாக  எங்களுக்கு தெரியாது. இதன் மூலம் நாங்கள் 500 டாலர்கள் வரை சம்பாதித்தோம்" என்று கூறினர். இந்த தம்பதிகள் குறித்து சுற்றுசூழல் அமைச்சகத்தின் பொது செயலாளர் கூறியது. வனவிலங்குகளை இவ்வாறு  கொன்று சமைத்து உண்பது என்பது தண்டனைக்குரிய செயல். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றோம் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். மேலும் வனவிலங்குகளை சட்ட விரோதமாக வாங்கி விற்பவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

வனவிலங்குகள் தாக்கி 3 பேர் உயிரிழப்பு; ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
3 people incident wild animal issue Rahul Gandhi consoled in person

வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  இந்த வன விலங்குகள் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை வயநாட்டில் வன விலங்குகள் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து வயநாடு பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை இன்று ஒருநாள் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு வயநாடு தொகுதிக்கு திரும்பினார். இதனையடுத்து வயநாட்டில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்படி யானை தாக்கி உயிரிழந்த வனக்காவலர் அஜீஷின் என்பவர் வீட்டிற்கும், புலி தாக்கியதில் உயிரிழந்த பிரஜீஷின் வீட்டிற்கும், சுற்றுலா வழிகாட்டி பாலின் வீட்டிற்கும் இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

Next Story

70 ஆண்டுகளில் கம்போடிய முதல் பெண் ஜனாதிபதி!

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Cambodia's first female president in 70 years!

 

கம்போடியாவில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஜூலை 23 நடைபெற்றது. அதில், ஆசியாவின் நீண்ட கால ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்ற, எழுபது வயதான ஹூன் சென் மீண்டும் பிரதமராக தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் தனது மகன் ஹூன்மான்ட்டை பிரதமராகவும் அறிவித்தார். 70 வருடங்களாக கம்போடியாவில் பெண் ஜனாதிபதியாக  எவரும் பதவி வகிக்கவில்லை. இந்நிலையில், கம்போடியாவின் தேசிய சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தலைவராக குவான் சுதாரி செவ்வாய்க்கிழமை முதல் புதிய ஐந்தாண்டு காலத்திற்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் கம்போடியா நாட்டின் வரலாற்றில் உயர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி ஆனார்.

 

கம்போடியாவின் நேஷனல் டெலிவிஷன் ஆஃப் கம்போடியா'வின் (டிவிகே) கருத்துப்படி, 70 வயதான குவான் சுதாரி, தற்போது ஆளும் கம்போடிய மக்கள் கட்சியின் நிலைக்குழுவில் உறுப்பினராகவும், தேசிய சட்டமன்றத்தின் இரண்டாவது துணைத் தலைவராகவும் உள்ளார். கம்போடியாவில் ஜூலை 23 நடந்த பொதுத் தேர்தலில் கம்போடிய மக்கள் கட்சி, தேசிய சட்டமன்றத்தில் 125 இடங்களில் 120 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பெற்றது. பின்னர் சுதாரி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது சுமார் 123 சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை ஒருமனதாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர் என்பது கவனிக்கத்தக்கது. 1990களில் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார் சுதாரி. தேசிய சட்டமன்றத்தின் தலைவராவதற்கான அவரது பயணம் என்பது பல ஆண்டுகளாக அரசியல் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டுடன் அமைந்தது. அவர் முன்பு வகித்த தேசிய சட்டமன்ற இரண்டாவது துணைத் தலைவர் பதவிதான் சுதாரியின், இந்தப் புதிய பொறுப்பை ஏற்க அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

 

இது குறித்து கம்போடியாவின் ராயல் அகாடமியின் ( பல்கலைக் கழகம் ) பொதுச் செயலாளர் யாங் பியூ, "தேசத்திற்குக் கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க கௌரவமாக பார்க்கிறேன்" என்றார். தொடர்ந்து, கம்போடியாவிற்கும், தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்த நியமனம் முக்கிய தருணம். கம்போடியாவில் முதன்முறையாக பெண் ஒருவர் சட்டப் பேரவைத் தலைவராக பதவியேற்றுள்ளார். இந்த சாதனை வெறும் மைல்கல் அல்ல, இது நமது தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்,'' என குறிப்பிட்டார்.

 

உலகின் முதல் பெண் ஜனாதிபதி அர்ஜென்டினாவின் மர்ம எஸ்டெலா 'இசபெல்' மார்டினெஸ் கார்டாஸ் டி பெரோன் ஆவார். இவர் 1974 முதல் 1976 வரை அர்ஜென்டினாவின் ஜனாதிபதியாக இருந்தார். தனது கணவர் ஜனாதிபதி ஜுவான் பெரோன் பதவியில் இருந்த போது இறந்துவிட்டார். இதனால் இசபெல் ஜூலை 1, 1974 முதல் மார்ச் 24, 1976 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார். உலகின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஜனாதிபதி ஐஸ்லாந்தின் விக்டிஸ் ஃபின்போகாட்ஸ்டிர் ஆவார். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 2007 ம் ஆண்டு முதல் பெண் ஜனதிபதியாக பிரதீபா பாட்டிலை நியமித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு.