Skip to main content

கார் மீது காதல் - மறைந்த காதலனை காருடன் அடக்கம் செய்த உறவினர்கள்

Published on 02/06/2018 | Edited on 02/06/2018
car lover

 

குய் என்பவர் இருபது ஆண்டுகளாய் பயன்படுத்திய காரின் மீது  தீராக் காதால் ஏற்பட்டுள்ளதால், அவர் இறந்த பின்னர் அந்த காரையும் உடன் வைத்து புதைத்துள்ளனர். 

சீனாவில் ஹெபேய் என்ற மாகாணத்தில் குய் என்று ஒருவர் இருந்துள்ளார். அவருக்கு சிறு வயதிலிருந்தே கார்கள் என்றால் அதிகம் பிடிக்குமாம். ஆகையால், அவர் பயன்படுத்தி வந்த காரின் மீதும் அதிக பாசம் நேசம் எல்லாம் வைத்துள்ளார்.

குய் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உடல்நல கோளாறால் இறந்துள்ளார். அவர் அதற்கு முன்பே தன் குடும்பத்தார்களிடம் நான் இறந்தாலும், என் காருடனையே என்னை புதைத்துவிடுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தாராம். அதன்படி, அவரின் சடலத்தை காரில் வைத்து புல்டோஸரின் மூலம் பெரிய பள்ளம் நோண்டப்பட்டு, காரை பெரிய கொக்கி கொண்ட கிரேன் மூலம் உள்ளே புதைத்துள்ளனர். இதை விடியோ எடுத்து டிவிட்டரில் பதிவிட. தற்போது உலகம்முழுவதும் பரவலாக பேசப்பட்டும், கலாய்க்கப்பட்டும் வருகிறது.    

 

           

சார்ந்த செய்திகள்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.