Skip to main content

'160 கிலோ மீட்டர் வேகம்... 100 கிலோ மீட்டர் பயணம்' வாகன ஓட்டிகளை அலறவிட்ட சிறுவன்!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019


பிரான்ஸில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் சிறுவன் ஒருவன் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த சிறுவனையும், காரையும் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்கள் இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரித்த காவல்துறை அதிகாரிகள், அந்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளனர். அதில் சிறுவன் எந்த வழியாக காரை ஓட்டிச் சென்றுள்ளான் என்பதை கண்டறிந்த அவர்கள், அந்த சாலையில் உள்ள அனைத்து கேமராவையும் ஆய்வு செய்தனர். மேலும் அருகில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறுவனின் புகைப்படத்தையும், காரின் பதிவெண்ணையும் அனுப்பி வைத்துள்ளனர்.

cfgn

அந்த காரின் புகைப்படத்தை பார்த்த இளைஞர் ஒருவர் தங்கள் வீட்டுக்கு அருகில் இந்த கார் நீண்ட நேரமாக நிற்பதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். காவல்துறை அதிகாரிகளை கண்ட அச்சிறுவன் கண்ணீர் விட்டு அழுதுள்ளான். இதுதொடர்பாக சிறுவனிடம் விசாரித்த போது, தான் காரை சிறிது தூரம் ஓட்ட விரும்பி எடுத்ததாகவும், ஆனால், வேகமாக ஓட்டியதால் அதிகப்படியான தூரம் கடந்துவிட்டதாகவும் தெரிவித்தான். மேலும், 8 வயதிலேயே கார் ஓட்ட கற்றிருந்ததால், எனக்கு வேகமாக வந்ததில் எந்த சிரமமும் இல்லை என்றும், ஆனால், கழுத்துபுறம் அதிகமாக வலிப்பதாகவும் தெரிவித்துள்ளான். திரும்பி போவதற்கு வழி தெரியாததால் தான் சாலை ஓரத்தில் காரை நிறுத்தினேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஹரியானாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Former MLA in Haryana incident

ஹரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங், பஹதுர்கர் என்ற இடத்தில் காரில் பயணித்த போது அங்கிருந்த மர்ம கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் காரில் பயணித்த கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜஜ்ஜார் மாவட்ட எஸ்.பி. அர்பித் ஜெயின்  கூறுகையில், “இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சி.ஐ.ஏ. மற்றும் எஸ்.டி.எஃப். குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார். மேலும், இது பற்றி ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எஸ்.டி.எஃப். விசாரணையில் இறங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.

பிரம்மா சக்தி சஞ்சீவனி மருத்துவமனை மருத்துவர் மணீஷ் ஷர்மா கூறுகையில், “துப்பாக்கிச் சூட்டில் சுடப்பட்ட நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ. நஃபே சிங் மற்றும் மற்றொரு நபர் ஜெய்கிஷன் ஆகிய இருவரும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இருந்தனர். நாங்கள் சி.பி.ஆர். சிகிச்சை அளித்தோம். இருப்பினும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. தோள்பட்டை, தொடை மற்றும் மார்பின் இடது பக்கம் ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மேலும் இருவர் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

ஹரியானா மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா கூறுகையில், “ஹரியானாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. ஜஜ்ஜரில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. . ஹரியானாவில் யாரும் பாதுகாப்பாக இல்லை. தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள், அரசியல்வாதிகள் சாலைகளில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இங்கு அரசு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமா அல்லது முதல்வர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.