Skip to main content

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய 'LVMH' நிறுவனத்தின் அதிகாரி!

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் (BLOOMBERG BILLIONAIRES) நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

 

 

BLOOMBERG COMPANY RELEASED BILLIONAIRES LIST BERNARD ARNAULT OVER TAKE BILL GATES

 

 


இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 2- ஆம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் கூறியுள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2- ஆம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3- ஆம் இடத்திலும் உள்ளனர்.

 

BLOOMBERG COMPANY RELEASED BILLIONAIRES LIST BERNARD ARNAULT OVER TAKE BILL GATES

 

 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால், அவரே பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடித்திருப்பார் என ப்ளூம்பெர்க் (BLOOMBERG) சுட்டிக்காட்டியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பில்கேட்ஸை சந்தித்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

mahesh babu met bill gates

 

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரின் ஹிட் படங்களான போக்கிரி, கில்லி உள்ளிட்டவை தமிழில் விஜய் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியது.  சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்காரு வாரி பாட்டா  படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தாக இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவும் அவரது மனைவி நம்ரதாவும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸை சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த மகேஷ்பாபு, "பில்கேட்ஸை சந்தித்தது மகிழ்ச்சி. உலகம் இதுவரை கண்ட தொலைநோக்கு பார்வையாளர்களில் இவரும் ஒருவர். மிகவும் அடக்கமான இவர் உண்மையில் ஒரு உத்வேகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

ஒருவருட காலமாக அசுர வளர்ச்சி: ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக மாறிய அதானி!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

gautam adani

 

இந்தியாவின் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானி, ஆசியா அளவிலும் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், இந்தியாவில் அம்பானிக்கு அடுத்த பெரும்பணக்காரராக இருந்துவந்த அதானி, ஆசிய அளவிலும் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சீன பணக்காரர் ஜோங்ஷான்ஷானை பின்னுக்குத் தள்ளி, அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலக அளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும் முகேஷ் அம்பானியும் அதானியும் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். அம்பானி 13வது இடத்திலும், அதானி 14வது இடத்திலும் உள்ளனர். அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 32 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், முகேஷ் அம்பானி இந்த வருடத்தில் மட்டும் 175.5 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். இதனை புளூம்பர்க் இதழ் தெரிவித்துள்ளது. 

 

கரோனா பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அதானியின் நிறுவனங்கள் லாபத்தை அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. கடந்த  வருடத்தில் மட்டும் அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகளின் விலை 1,145% வரை அதிகரித்துள்ளது, அதானி என்டர்ப்ரைசஸ் நிறுவன பங்குகளின் விலை 827% வரையும், அதானி ட்ரான்ஸ்மிஷன் நிறுவனப் பங்குகளின் விலை 615% வரையும், அதானி க்ரீன் எனெர்ஜி நிறுவனப் பங்குகளின் விலை 435% வரையும், அதானி பவர் நிறுவனம் தோராயமாக 189 % வரையும்  வளர்ச்சி அடைந்துள்ளன.