Skip to main content

46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவையின் சடலம் கண்டுபிடிப்பு!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவையின் உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில் வேட்டைக்கு சென்ற சிலர் பனியில் மறைந்து இறந்து கிடந்த பறைவை ஒன்றின் சடலத்தை பார்த்துள்ளனர். இதற்கு முன்பு இந்த மாதிரியான பறவையை அவர்கள் பார்த்ததில்லை என்பதால் அதனை அருங்காட்சிய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் அந்த பறவையை எந்த காலகட்டத்தில் வாழ்ந்தது என்பதை கண்டறிவதற்காக கார்பன் டேட் சோதனை செய்தனர்.
 

n



அதில் பல ஆச்சரியமான முடிவுகள் தெரியவந்தது. அந்த பறவைகள் பனியுகம் என்று அழைக்கப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்து வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பனியுகம் என்பது உலகம் முழுவதும் பனியால் சுழப்பட்டிருந்த காலகட்டத்தை குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் அந்த பறவை 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களில் ஒன்று என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். இதன் மூலம் மேலும் பனியுக காலத்தில் வாழ்ந்த உயிரினங்களை கண்டறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

கார் ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநர்; கதறி அழுத மனைவி

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Lorry driver hits car driver; A crying wife

 

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலையில் கார் ஒன்றின் மீது லாரி மோதிய சம்பவத்தில் கார் ஓட்டுநருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், லாரி ஓட்டுநர் கார் ஓட்டுநரை அவருடைய மனைவி முன்பே தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ரேடியல் சாலையில் லாரி மோதியதில் கார் சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுநர் லாரி ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் சொன்னதாலும், ஆபாசமாக பேசியதாலும் லாரியின் சாவியை கார் ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நபரின் மனைவி முன்பே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த நபரின் மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.