Skip to main content

பைக் திருடர்களை காட்டி கொடுத்த இளைஞர் கொடூர கொலை!

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

bike youngster incident in vilupuram

 

விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் அருண் (21). விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ வரலாறு படித்து வந்த அருணின் இருசக்கர வாகனம் காணாமல் போனது. இது தொடர்பாக அருண் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது இருசக்கர வாகனத்தை திருடியதில் தனது கிராமத்தைச் சேர்ந்த 4 பேரின் மீது சந்தேகம் இருப்பதாக கூறிய, அருண் அவர்களுடன் செல்போனில் பேசிய குரல் பதிவை போலீசாரிடம் ஆதாரமாகக் கொடுத்துள்ளார்.

 

இதனையடுத்து அந்த கிராமத்திற்குச் சென்ற போலீசார் வீரமணி, சத்தியா, சரத்ராஜ், கீர்த்தி வர்மன் ஆகிய நான்கு பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இரு சக்கர வாகனத்தை நாங்கள் திருடவில்லை என அவர்கள் போலீசாரிடம் கூறியதையடுத்து போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். தங்கள் மீது புகாரளித்த அருண் மீது ஆத்திரம் கொண்ட நான்கு பேரும் மேலும் சில கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு 'இருசக்கர வாகனத்தை நாங்கள் தான் திருடினோம் அதைத் திருப்பி தருகிறோம் நாங்கள் சொல்லும் இடத்திற்கு வா' எனக் கூறியுள்ளனர்.

 

மாணவன் அருணும் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்ற நிலையில் பணப்பாக்கம் ஏரிக்கரையில் வைத்து அருணின் கழுத்தை நெரித்து கொலை செய்த அந்த கும்பல் அருணின் ஆடைகளைக்  களைந்து உள்ளாடைகளுடன் சடலத்தை பணப்பாக்கம் ஏரியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றனர்.

 

இக்கொலையில் ஈடுபட்ட கும்பலில் இருந்த சத்தியா என்ற இளைஞன் கிராமத்திற்கு வந்து போதையில் கொலை செய்ததை உளறியுள்ளான். உடனடியாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கும்பலை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கொலை செய்து பணப்பாக்கம் ஏரியில் வீசப்பட்ட அருணின் சடலத்தை போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டதில் இன்னும் பல நபர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை கைது செய்ய வேண்டும், அதுவரை மாணவனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.