ADVERTISEMENT

"இதுதான் தலைமைப் பண்பு"... பிரதமர் மோடியைப் புகழ்ந்த பூடான் பிரதமர்...

03:50 PM Mar 13, 2020 | kirubahar@nakk…

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா தற்போது சுமார் 100 நாடுகளில் பரவியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 74 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா பரவலுக்கு எதிராக சார்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுகுறித்து பேசிய அவர், "நமது கிரகம் முழுவதுமே கரோனா வைரசுடன் போராடுகிறது. பல்வேறு மட்டங்களில், அரசாங்கங்களும் மக்களும் அதை எதிர்த்துப் போராட முயல்கின்றனர். இந்த நேரத்தில், உலக மக்கள்தொகையில் கணிசமான எண்ணிக்கையைக் கொண்டுள்ள நாடுகளான தெற்காசிய நாடுகள், நமது மக்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தென் ஆசியப் பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) நாடுகளின் தலைமை கரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வலுவான திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத் திட்டங்களை வகுக்கக் வீடியோ கான்பரன்சிங் மூலம் நாம் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், "இதைத்தான் நாம் தலைமைப்பண்பு என்று அழைக்கிறோம். இந்த பிராந்தியத்தின் உறுப்பினர்களாகிய நாம் இப்படிப்பட்ட காலங்களில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். சிறிய பொருளாதார நாடுகளே இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன, எனவே நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உங்கள் தலைமையில், உடனடி மற்றும் பயனுள்ள விளைவுகளை நாங்கள் காண்போம் என்பதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT