Skip to main content

“பாரதத்தின் எழுச்சி தடுக்க முடியாதது..” - லண்டனில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் 

Published on 07/05/2023 | Edited on 07/05/2023

 

“Bharat's rise cannot be stopped..” - Vice President Jagdeep Dhankar in London

 

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற நிலையில் அவரது மறைவு உலக நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு மரியாதைக்கு பிறகு அவரது உடல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. 

 

ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டனின் இளவரசர் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராகப் பொறுப்பேற்றார். மன்னராகப் பொறுப்பேற்ற சார்லஸின் முடி சூடும் விழா நேற்று லண்டனில் நடைபெற்றது.

 

லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ்க்கு முடிசூட்டப்பட்டது. தேவாலயத்தின் பேராயர் செயிண்ட் எட்வர்ட் கிரீடத்தை மன்னருக்கு சூட்டினார். பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தேவாலயம் வரை மன்னர் சார்லஸ்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் முடிசூட்டும் விழாவில்  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். 

 

மேலும், லண்டனில் இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், “உலகளாவிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தால், நமது டி.என்.ஏ. மிகவும் வலிமையானது. நமது அறிவுக்கு எந்த சவாலும் இல்லை. நாம் எங்கு சென்றாலும், அற்புதமாகச் செயல்படுகிறோம். ஆனால் நம் நாட்டில் அமைப்பின்மையின் காரணமாக நாம் பாதிக்கப்படுகிறோம். பல வளர்ந்த நாடுகளில் ஒரே அமைப்பு இருப்பதால் அவைகள் சாதாரணமாக வளர்கின்றன. அதேசமயம், கடந்த 8 ஆண்டுகளில், நாமும் அமைப்பு முறையில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். நமது பாரதம், தற்சமயம், முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. பாரதத்தின் எழுச்சி தடுக்க முடியாதது” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.