Advertisment

19 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு நடந்த அதிசயம்!

பெரு நாட்டில் உடல் ஒட்டிபிறந்த இரண்டு குழந்தைகளை மருத்துவர்கள் பலமணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிருடன் மீட்டுள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த குழந்தைகள் பிறந்தன. உடனடியாக அந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போனதால் பத்து மாதங்களுக்கு பிறகு தற்போது அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை பிரித்துள்ளார்கள்.

Advertisment

இந்த அறுவைச் சிகிச்சை 19 நேரம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று வெற்றிகரமாக அந்த அறுவை சிகிகிச்சையை செய்து முடித்தனர். அந்த குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
baby
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe