style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தென்மேற்கு சிரியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 17 இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
தென்மேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டெர்ரா நகரத்தின் கிழக்கு பகுதியில் திடீர் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வான்வழி தாக்குதலை நடத்தியது முசய்பிரா எனும் ரஷ்ய குண்டுவீசும் விமானம் என்று அடையாளம் காணப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் இறந்துள்ளனர். இந்த திடீர் வான்வழி தாக்குதலால் அந்த பகுதில் பதற்றம் நீடித்து வருகிறது.