Skip to main content

ஹைதி அதிபர் படுகொலை? – அமெரிக்கா மற்றும் கொலம்பியாவை சேர்ந்த 17 கூலிப்படையினர் கைது!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021
Assassination of Haitian President? - 17 mercenaries arrested, including two Americans and 15 Colombians

 

அமெரிக்கா கண்டத்தின் ஒருப்பகுதியாக கரிப்பியன் தீவு தொடர்களில் உள்ள நாடு ஹைதி. இதன் மக்கள் தொகை சுமார் கிட்டதட்ட 1 கோடியே 10 லட்சம் . இந்த நாட்டின் பெயர் தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களில் அடிக்கடி அடிப்பட்டன. தமிழகத்தில் பாலியல் வழக்கில் பிரபலமான நித்தியானந்தன் இங்குதான் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த நாட்டின் அதிபராக இருந்தவர் ஜோவ்னல் மொய்சே. வறுமையினால் பிடியில் இருக்கும் இந்த நாட்டிற்கு பெரிய அளவிலான வருமானமே சுற்றுலா மூலமாகத்தான். இந்த நாட்டிலுள்ள கடற்கரைக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் செல்வார்கள். அதோடு பாலியல், போதை பொருள் சர்வசாதாரணமாக கிடைக்கும். வறுமை, வேலைவாய்ப்பு இல்லாததால் கொள்ளையர்கள், அதிலும் துப்பாக்கி வைத்துள்ள கொள்ளையர்கள் அதிகம். போதை பொருள் கடத்தல் இங்கு அதிகம்.

 

கடந்த 50 ஆண்டுகளில் ராணுவ ஆட்சி, கொள்ளையடிக்கவே ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள் என தொடர் துன்பத்தில் உள்ள மக்களுக்கு இயற்கையும் அடிக்கடி இந்த மக்களை துன்புறுத்தும். இயற்கை சீற்றத்தால் கடந்த 25 ஆண்டுகளில் 5 லட்சம் மக்கள் இறந்துள்ளார்கள். இந்தநாட்டின் அதிபருக்கான பொதுத்தேர்தல் 2016ல் நடைபெற்றது, அதில் 26 சதவித மக்களே வாக்களித்தனர். அதில் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று மீண்டும் ஜோவ்னல் மொய்சே வெற்றிபெற்று அதிபரானார். நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணய் விலை அதிகமாகிவிட்டன. அதற்கு காரணம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரியளவில் ஊழல்கள் நடந்துள்ளன. இந்த ஊழலில் அதிபருக்கும் தொடர்பு என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. மக்கள் சாலைகளில் வந்து போராடத்துவங்கினர், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் போராட்டம் இன்னும் வீரியமடைந்தது.

 

2018 ஜீலை 7ஆம் தேதி மக்கள் போராட்டம் ஹைதி தலைநகரில் தொடங்கியது. தொடர்ச்சியான இந்த போராட்டத்தில் 187 போராட்டக்காரர்கள், 44 காவல்துறையினர், 2 பத்திரிக்கையாளர்கள் என கொல்லப்பட்டும் போராட்டம் நிற்கவில்லை. 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றுயிருக்கவேண்டும். ஆனால் நாட்டில் அமைதியற்ற நிலையால் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்தார் அதிபர். ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பை அவராகவே செய்துக்கொண்டார் ஜோவ்னல் மொய்சே. இதனால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகின. 2018 ஜீலை 7 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் சரியாக மூன்றாண்டுகள் முடிந்து 2021 ஜீலை 7 ஆம் தேதி இரவு அதிபர் ஜோவ்னல் மொய்சே அவரது வீட்டின் படுக்கையறையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது மனைவியும் சுடப்பட்டதில் குண்டு காயங்களுடன் அமெரிக்காவின் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். ஹைதி அதிபரின் படுகொலைக்கு அமெரிக்கா, கனடா உட்பட சில நாடுகளின் தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

 

அதிபர் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை பிடிக்க நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியதில் தலைநகரில் ஆயுதம் தாங்கிய ஒருக்குழுவோடு நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் 17 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளது போலீஸ். அதில் 15 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள். அதில் 6 பேர் கொலம்பியா இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அதோடு அமெரிக்காவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொலைக்கான காரணத்தை கண்டறிய தீவிரம் காட்டிவருகிறது ஹைதி காவல்துறை. அதிபரை சுற்றி 30க்கும் அதிகமான பாதுகாப்பு வீரர்கள் இருப்பர். 12 வாகனங்களில் பாதுகாப்பு வீரர்கள் பயணம் செய்வர். அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு உண்டு. அப்படியிருக்க பாதுகாப்பு படையினரை மீறி உள்ளே சென்று கூலிப்படையினர் எப்படி சுட்டுக்கொன்றார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கொலை கும்பலில் இரண்டு அமெரிக்கர்கள் கைதாகியிருப்பது உலகளவில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையின் பின்னணியில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ உள்ளதா என்கிற கேள்வி எழுகிறது. அதிபரின் படுகொலைக்கு காரணம் எது என்கிற புலனாய்வு தீவிரமாக நடந்துவருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எது சனநாயகம்?’ - எழுத்தாளர் நா. அருணின் முதல் படைப்பு

Published on 12/02/2024 | Edited on 13/02/2024
'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது. 

இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.

'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்ய கோரி ஐஆர்எஸ் அதிகாரி கடிதம்! 

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
IRS official letter demanding dismissal of Union Minister Nirmala Sitharaman

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனில் ஆஜராவதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தங்களது ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்று குறிப்பிட்ட தேதியில் ஆஜராகியுள்ளனர்.

இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக வந்த எழுதப் படிக்கத் தெரியாத பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக நுங்கம்பாக்கம் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மூலம் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அமலாக்கத்துறை மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த புகார் குறித்து வழக்கறிஞர் பிரவீனாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை நடத்தினர். அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து  புகார் மனு அளித்துள்ளனர். எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

IRS official letter demanding dismissal of Union Minister Nirmala Sitharaman

இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஜிஎஸ்டி துணை ஆணையரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான பாலமுருகன் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், “சம்மன் அனுப்பப்பட்ட இரு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 450 ரூபாய் மட்டுமே இருப்பு உள்ளது. இரு விவசாயிகளும் அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருகின்றனர். பாஜக பிரமுகருக்கும், சம்பந்தப்பட இரு விவசாயிகளுக்கும் இடையே நிலப்பிரச்சனை உள்ள நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பபட்டுள்ளது. சாதியை குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு மத்திய நிதியமைச்சர் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.