Skip to main content

ஆண்ட்ராய்டு ஃபோன் தாங்கும் ஐ - ஃபோன் தாங்காது...!

Published on 01/11/2018 | Edited on 01/11/2018

ஆப்பிள் ஐ - ஃபோன் எப்போதுமே தனி அங்கீகாரத்தைக்கொண்டது. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலம் அதன் மேல் ஒரு சிறிய சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் சிக்காகோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ கருவியை பொருத்துவதற்காக  சென்றிருக்கிறார்கள். அப்போது உள்ளே சென்றவர்களின் ஆப்பிள் ஐ - ஃபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மொத்தமாக செயலிழந்துள்ளது. இவ்வாறு நடப்பதற்கு காரணம் என்னவென்று ஆராயிந்து பார்த்தபோது, சுமார் 120 லிட்டர் ஹீலியம் வாயு ஐந்து மணி நேரமாக ஐ - ஃபோன் மற்றும் அதன் சாதனங்களுக்குள் சென்றதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ii

 

 

இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு அனைத்து ஆப்பிள் ஃபோன்களுக்கும் இந்தப் பாதிப்பு இருக்கிறதா என்று ஆராய்ந்திருக்கிறார்கள். அதில் ஐ - ஃபோன் 6 மற்றும் அதற்கு அடுத்த மாடல்களில் மட்டும்தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் இந்தப் பிரச்சனை ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு எந்த வகையான பிரச்சனையும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.  

சார்ந்த செய்திகள்

Next Story

சார்ஜர் இல்லாமல் ஐ போன்... ஆப்பிளுக்கு 19 கோடி அபராதம்

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

 iPhone without charger... Apple fined 19 crores!

 

சார்ஜர் இல்லாமல் ஐ போன் விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு.

 

சார்ஜர் உடன் மட்டுமே செல்போன் விற்க வேண்டும் என பிரேசில் அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஐ போனுக்கு கூடவே அதற்கான சார்ஜரை வழங்கினால் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் தங்களால் செல்போனுடன் சார்ஜரை விற்க முடியாது என பிரபல நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து வந்தது. ஆனால் சாம்சங் தனது புதிய போனை சார்ஜர் உடன் விற்று வருகிறது. இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு, சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

 

Next Story

ஆப்பிளின் புதிய ஐஃபோன்- 13 சென்னையில் தயாராகிறது!

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Apple's new iPhone 13 is ready in Chennai!

 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஐஃபோன்- 13 உற்பத்தி, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியுள்ளது. 

 

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து தரும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஆப்பிள் ஐஃபோன்- 13 உற்பத்தி செய்து தர தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஐஃபோன்களின் முன்னணி மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் சென்னை ஆலையில் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

சென்னையில் ஃபாக்ஸ்கான் உள்பட மூன்று ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிள்களின் ஐஃபோன்கள் உற்பத்திச் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஸ்ரீபெரும்புதூரில் ஐஃபோன் 13 உற்பத்தி நமது பயணத்தின் மற்றொரு மைல்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும், உலகத்துக்கும் மேக் இன் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக்கில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.  

 

இந்திய செல்போன் சந்தையில் ஆப்பிள்களின் சந்தை பங்கும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.