Skip to main content

கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2200 ஆண்டுகள் பழமையான நகரம்... ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்...

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கடலுக்குள் மூழ்கிய நகரம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

 

ancient lost city of egypt found under sea

 

 

எகிப்து கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இந்த நகரத்தில் 2200 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக கடலுக்குள் சென்ற டைவர்கள், அங்கிருந்த கோயில் ஒன்றையும், பழைய கப்பல் ஒன்றையும் கண்டறிந்தனர். இந்த கப்பல் கிபி 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கண்டறியப்பட்ட கோவிலில் உள்ள பிரம்மாண்ட சிலைகள், நாணயங்கள் மற்றும் பொருட்கள் 2200 ஆண்டுகள் முன்பு செய்யப்பட்டது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. கோயில்களின் நகரம் என்றும் ‘lost city of Atlantis in Egypt' என்றும் அழைக்கப்பட்ட இந்த நகரம், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வ செழிப்புடன் இருந்திருக்க கூடும் எனவும், பின்னர் நிலநடுக்கம் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவால் கடலுக்குள் சென்றிருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நகரம் கடலுக்குள் சென்ற நிலையில் இதன் வழியாக கிபி மூன்றாம் நூற்றாண்டு பயணம் செய்த கப்பல் அங்கு மூழ்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2200 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில்கள், சிலைகள், தூண்கள் என இந்த கண்டுபிடிப்பு வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். 

ancient lost city of egypt found under sea


 

சார்ந்த செய்திகள்

Next Story

எகிப்தில் இஸ்ரேலியர்கள் இருவர் சுட்டுக்கொலை!

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Two Israelis shot passed away Egypt

 

இஸ்ரேல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் சமயத்தில், எகிப்தில் இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், நேற்று முன்தினம் காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல் -அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போரை அறிவித்து வான்வெளி, தரைவழி என தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இரு தரப்பு மோதல் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் எகிப்து நாட்டில் இஸ்ரேலியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தின் மத்திய பகுதி அலெக்சாண்டிரியாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் அங்கு ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் அந்த  நகரிலுள்ள பாம்பே தூண் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மக்கள் கூடியிருந்தனர். திடீரென, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு போலீஸ் அதிகாரி, துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். இதில், மூன்று பேர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். அதில், இருவர் இஸ்ரேல் நாட்டு பயணிகள் எனவும் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. 

 

இதனைத் தொடர்ந்து, வன்முறையை நிகழ்த்திய போலீஸ் அதிகாரியைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து அவ்வாறு நடந்து கொண்டேன் என்று கூறியதாகத் தெரிகிறது. 

 

 

 

Next Story

“தொன்மையான 3 மொழிகளில் தமிழ்மொழி பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது” - எகிப்தில் அப்பாவு பெருமிதம்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Among the 3 ancient languages, Tamil is the most legendary says appavu in Egypt

 

கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் அக்டோபர் மாதம் 03 ஆம் தேதி முதல் 05 வரை 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாகச் சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு கலந்து கொள்கிறார். இவருடன் சட்டமன்றச் செயலாளர் கி. சீனிவாசன் இந்திய வட்டார பிரதிநிதிகளின் செயலாளராகக் கலந்து கொள்கிறார். மேலும் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் பத்ம குமாரும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று (26.09.2023) காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து எகிப்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கின்றனர். அதன்பின்னர் பின்பு அக்ரா நகருக்கு 03.10.2023 அன்று சென்றடையவுள்ளனர். இதையொட்டி பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று துபாய் வழியாக எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார். கெய்ரோவில் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு  இன்று (27.9.2023) அந்நாட்டின் செனட் துணை சபாநாயகர் பாஹா எல்டின் ஸுக்கா, தலைமையில் நடைபெற்ற செனட் சபையின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் இந்த கூட்டத்தில், அந்நாட்டின் செனட் செகரட்டரி ஜெனரல் முகம்மது இஸ்மாயில் இட்மேன், இந்திய தூதர் அஜித் குப்தா, அசாம் சட்டப் பேரவைத் தலைவர் பிஸ்வாஜித் டைமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு  இந்த கூட்டத்தில் பேசுகையில், “எகிப்தில் முதன் முதலில் தோன்றிய நைல் நதி நாகரீகம் போன்று, இந்தியாவின் வடக்கில் சிந்து சமவெளி நாகரீகமும், தெற்கில் தாமிரபரணி நாகரீகமும் மிகவும் தொன்மையானது. அதேபோல், தொன்மையான மூன்று மொழிகளில் தமிழ்மொழி பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது. இந்த பழமையான மொழி இன்றும் இளமையுடன் உள்ளது. நாளையும் இது தொடரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, காலநிலை மாற்றத் தாக்கத்தை குறைத்திடவும், வனங்களைப் பாதுகாத்திடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ச்சியாக கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார். அதே சமயம் 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு 07.10.2023 காலை 08.25 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைகின்றனர்.