Skip to main content

‘இந்தியாவில் தமிழ்நாடு தான் டாப்’ - அமெரிக்க நாளிதழ் பாராட்டு

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
American newspaper praise Tamil Nadu is the top in india

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது. 

மாநாட்டைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல நாளிதழ், தமிழ்நாடு தொழில்துறையில் முன்னிலை வைத்து வருவதாக பாராட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த கட்டுரையில், ‘எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தியை, இந்தியாவில் அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு மானியம் வழங்க ஆரம்பித்தது. இதனால் நொய்டா உள்ளிட்ட சில இடங்களில் புதிய தொழிற்சாலைகள் உருவாகின. ஆனால், தமிழ்நாட்டிலோ மின்னணு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கு சலுகைகள் காரணமாக அமையவில்லை.

போக்குவரத்து வசதி, ஏராளமான பட்டதாரிகள், சிறந்த கல்வி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் உள்ளதால் அங்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில்கள் ஈர்த்துள்ளன. நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியில் தைவானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தான் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆனால், ஐபோன் தயாரிப்பு மையமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது. 18,720 தொழிலாளர்கள் தங்கும் வசதி கொண்ட இரும்பு பிரம்மாண்ட குடியிருப்புகள் ஸ்ரீபெரும்புதூரில் கட்டப்பட்டு வருகின்றன. சீனாவில் ஐபோன் தயாரிக்கப்பட்டு வந்த ஷெஞ்ஜென், ஜென்ஜவ் நகரங்களை போன்று ஸ்ரீபெரும்புதூர் காணப்படுகிறது. மொத்த ஐபோன் உற்பத்தியில் 13 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் நிலையில் 75% தமிழ்நாட்டில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டே இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்

இந்தியா முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையில், 43% பேர் தமிழ்நாட்டு மட்டுமே உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 5%ஐ கொண்ட தமிழ்நாட்டில், நாட்டின் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையில் 43% பேர் உள்ளனர். கார், உதிரிபாக ஆலைகள், ஃபவுண்டரி, பம்ப்செட் தயாரிப்பி, பின்னலாடை தயாரிப்பில் ஏற்கனவே தமிழ்நாடு தான் முன்னணி வைத்து வருகிறது. இந்தியாவின் தீப்பெட்டி தயாரிப்பில் தமிழ்நாட்டின் சிவகாசி முன்னணியில் உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செழித்து வளர்ந்துள்ளதே தொழில்துறையில் தமிழ்நாடு வெற்றி பெற காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.